இது குடியரசு தினத்தன்று பப்பு வரைந்தது. மாடலுக்கு எதையும் கொடுக்கவில்லை. முதலில் வெர்டிக்கலாக ஆரஞ்சை தீட்டிவிட்டு இப்படிதானே இருக்கும் என்று கேட்டாள். விட்டால் இத்தாலி கொடியை வரைந்துவிடுவாளோ என்று படத்தைக் காட்டியதும் மீதியை தீட்டினாள். அப்புறம் சக்கரத்திற்கு இடமில்லாததால் தனியாக உருண்டுக் கொண்டிருக்கிறது. காந்தி தாத்தா....மன்னிச்சுடுங்க!

i எழுத்தில் இ இந்தியா, இண்டிபெண்டன்ஸ், இக்லூ, ஐஸ்க்ரீம், இன்செக்ட்ஸ் என்றாள்.
ஐஸ்க்ரீம் கோன் முதலில் ரஃபாக வரைய சொன்னேன். பின்னர் அதையே பெரிதாக இந்தத் தாளில் வரைந்து 'டிசைன்' செய்தாள். ஐஸ்க்ரீமிற்கு முதலில் பஞ்சு ஒட்டுவதாக நினைத்தோம். அவளுக்கு இந்த பொடி மேலே ஒரு கண். ஒட்டிவிட்டி தட்டுவதிலேயே விருப்பமாக இருந்தாள்.

இது இக்லூ. புத்தகத்தை பார்த்து வரைந்தது. அதன்மேலேயே பஞ்சை எடுத்து ஒட்டினாள்.